அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ்
– என்னை
அரவணைப்பாய்
அருளாளா
துன்பம்
என்னை துரத்துகின்றதே
சோதனை
வழி மறிக்கின்றதே –என்
கண்கள்
உன்னை தேடுகின்றதே
காத்தருள்வாய்
அருளாளா
மதி
மயக்க தவறுகளால் –என்
மனம்
என்னை வதைக்கின்றதே -என்
நாவடக்கம்
கொள்ளாததல் – என்
நல்ல
மனம் பதைக்கின்றதே
நாளும்
என்னை காத்தருள்வாய்
நல்ல
சொல்லே நாளும் அருள்வாய்
வாரிசுக்கு
நல்ல மகனை தந்தாய்- என்னை
வதைக்கும்
துர்குணம் ஏன் தந்தாய் – தீன்
வளரும்
நல்ல குணம் அருள்வாய் - என்
வாழ்வுக்கு அவனை துணை சேர்ப்பாய்
மனை
சிறக்க பெண் மக்களை தந்தாய்
மலர்ந்து
நிற்கின்ற பருவமும் தந்தாய்
மணமாலை
சேர வைப்பாய் – தீன்
மணவாளனை
சேர்த்து வைப்பாய் - நபி
மனம்
வாழ்த்தும் இல்லற வாழ்வளிப்பாய் .
என்
இல்லாள் நல் நோக்கங்கள்
நாளும்
நிறைவேற அருள் புரிவாய்
நானிருக்கும்
காலமெல்லாம் - அவள்
நலம்
சிறக்க அருள் புரிவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக