ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

இறைவா


நான் எழுத வேண்டும்
      உன் புகழ்தனை
எனக்கருள வேண்டும்
      நல் அறிவினை
என்னை பிறக்க வைத்தாய்

      இவ்வுலகினிலே
உன்னை நினைக்க வைப்பாய்
      என் மனதினில்
பொருள் விளக்கி வைப்பாய்
      இனிய தமிழினில்
உன்னை புகழ்ந்து வைப்பேன்
      என் கவிதனில்
எல்லா உலகையும் ஏகமாய்
      காக்கும் வல்லோனே
எல்லா உயிர்களிடத்திலும்
      அன்பு கொண்டிருக்கும் ரஹ்மானே
அளவற்ற அருளாளனே
      நிகரற்ற அன்புடையோனே
உன்னையே வணங்குகிறேன்

      உன்னிடமே உதவி தேடுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக