செவ்வாய், 10 செப்டம்பர், 2013

வாழ்க்கை

எது நடக்கணுமோ அது நடந்து கொண்டுதானிருக்கிறது
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் .
நடக்காததை நினைத்து கவலை எதற்கு ?
பேச வேண்டியதை நினைத்து பயம் எதற்கு ?
பேச வேண்டியதை பேசித்தான் ஆக வேண்டும் .

செய்யவேண்டியதை செய்து கொண்டு தான் இருக்கணும் .
சும்மா இருந்து கொண்டு பறவைகள் உண்ணவில்லை .
சும்மா இருந்து கொண்டு எறும்புகள் தின்னவில்லை .
நதிகள் நம்மை நோக்கி ஓடி வருகிறது .
நாம்தாம்  நிலம் தோண்டி நீர் பாய்ச்சனும் .]
விளைய வைப்பது இறைவன் பொறுப்புதான்  - ஆனால்
விதை விதைக்க வேண்டியது நமது கடமையல்லவா ?
அவசப்படுபவன் காயை தின்கிறான் .
பொறுமை காப்பவன் கனியை சுவைக்கிறான் .
இருந்த இடத்திலேயே  தேரை வாழ்கிறது .
அலைந்து திரிந்துதான் பறவைகள் உண்ணுகிறது .
குறைந்த முயற்சியில் செல்வந்தன் வாழ்கிறான் .
உழைத்து ஓய்ந்த பின்பே ஏழை உண்ணுகிறான் .
இது இறைவனின் நியதி – இது இறைவனின் அதிகாரம் .
சிலரது வாழ்க்கை வளர்பிறை .
சிலரது வாழ்க்கை தேய்பிறை .
சிலரது வாழ்க்கை பவுர்ணமி .
சிலரது வாழ்க்கை அமாவசை .
வானத்திலும் மாற்றங்களும் உண்டு – மனித
வாழ்க்கையிலும் மாற்றங்கள் உண்டு .
சுகத்தோடு வாழ்ந்தவர்கள் சுமையோடு போகிறார்கள் .
சோதனைகளை கடந்தவர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் .
சோதனையின்றி சுகங்கள் இல்லை – சுகம் மட்டுமே வாழ்க்கை இல்லை .

சோதனைகளை வெல்வோம் – சுகங்களை அடைவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக